சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது பெற்று சென்னை திரும்பினார். அவர் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் அண்ணா த்த படம் பார்த்தார். இந்நிலையில் நேற்று ரஜினிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது.
ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.