நடன கலைஞர் பண்டிட் பிர்ஜூ மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:
ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார்.ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும், விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பண்டிட் பிர்ஜூ கமல்ஹாசன் நடித்த. விஸ்வரூபம் படத்தில் உனை காணாது பாடலுக்கு நடனம் அமைத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.