சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக் கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து நேர்மையான நாணயமான ஆட்சியை வழங்குவேன் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். பிறகு பேட்டி அளித்த அவர், என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பேன்’ என்றார். இந்நிலையில் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஜனவரியில் கட்சித் துவக்கம் டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என்று குறிபிட்டிருப்பதுடன் மாத்துவோம் எல்லாத்தையும்
மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லன்னா எப்பவும் இல்ல என்று ஹேஷ் டேக் பகிர்ந்திருக்கிறார். வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற. ஜாதி, மதம் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்.. நிகழும்!!! என தெரிவித்திருக்கிறார்,
ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதுபற்றி வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசியல் வட்டாரங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.