கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
நடிகர் புனித ராஜ் குமார் மறைவிற்கு
ஆழ்ந்த இரங்கல்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என். ராமசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “கன்னட திரையுலகில் பல வெற்றிபடங்களில் நடித்து தனி ஆளுமையோடு பவனி வந்த புனித்ராஜ் குமார், இன்று மாரடைப் பால் காலமானார் என்ற செய்தி கேட்டு ஒட்டு மொத்த திரையுலகமே பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கர்நாடகத்தில் தனக் கென்று தனி முத்திரை பதித்து தந்தை வழியில் சமூகசேவை ஆற்றி வந்த புனித் ராஜ்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிக பெருமக்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் சார்பில் ஆழந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கி றோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.